Saturday, May 30, 2009

மண்ணில் இந்த காதல் அன்றி

படம் : கேளடி கண்மனி
இசை : இளையராஜா
குரல் : S.P.B


மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பார்வையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா


மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பார்வையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ


வெண்ணிலவும் பொன்னிநதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையில் சுகமன்றி
தந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்திவரும் பொங்கும் அமுதம் தந்திடும் குமுதமும்
கன்னிமயில் அருகே இருந்தால் சுவைக்கும்
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகம்தரும் அனங்கிவல் பிறப்பிதுதான்................


மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பார்வையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ
முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சித்திரையும் சின்ன விழியும் வில்லேறும் புருவமும்
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
என்னைவிட மறந்தால் எதற்கோர் பிறவி
இத்தனையும் இழந்தால் அவந்தான் துறவி
முடிமுதல் அடிவரை முழுவதும் சுகம்தரும்
விருந்துகள் படைத்திடும் அமுதமும் அவள் அல்லவா


மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பார்வையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா


மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பார்வையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்

படம் : நானே ராஜா நானே மந்திரி
குரல் : ஜெயச்சந்திரன் சுசீலா
இசை : இளையராஜா



மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே!
இங்கு நீயில்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ?

(மயங்கினேன்)

உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்
இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்?
வாடைக்காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம் கொதித்திருக்கும்
கோடைக்காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்

எந்நாளும் தனிமையே எனது நிலைமையோ
துன்பக் கவிதையோ கதையோ?

இரு கண்ணும் உன் நெஞ்சும்
இரு கண்ணும் நெஞ்சும் நீரிலாடுமோ?

(மயங்கினேன்)

ஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழணும்
உயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாயணும்

மாலைமங்களம் கொண்டாடும் வேளை வாய்க்குமோ?
மணவறையில் நீயும் நானும்தான் பூச்சூடும் நாளும் தோன்றுமோ?

ஒன்றாகும் பொழுதுதான் இனிய பொழுதுதான்
உந்தன் உறவுதான் உறவு!

அந்தநாளை எண்ணி நானும்
அந்தநாளை எண்ணி நானும் வாடினேன்

(மயங்கினேன்)


மனசு மயங்கும் மெளன கீதம்

படம் : சிப்பிக்குள் முத்து

மனசு மயங்கும் மனசு மயங்கும்
மெளன கீதம் மெளன கீதம்
மனசு மயங்கும் மெளன கீதம் பாடு

மன்மதக் கடலில்
மன்மதக் கடலில்
சிப்பிக்குள் முத்து
சிப்பிக்குள் முத்து
மன்மதக் கடலில் சிப்பிக்குள் முத்து தேடு

இதழில் தொடங்கு எனக்குள் இறங்கு
இதழில் தொடங்கு எனக்குள் இறங்கு
சுகங்கள் இருமடங்கு

ம்ம்ம்
மனசு மயங்கும் மெளன கீதம் பாடு
மன்மதக் கடலில் சிப்பிக்குள் முத்து தேடு

மார்பில் உண்டு பஞ்சணை
மடிகள் ரெண்டும் தலையணை
மடிகள் ரெண்டும் தலையணை

நீரில் நெருப்பின் வேதனை
அணைத்துக்கொண்டேன் தலைவனை
அணைத்துக்கொண்டேன் தலைவனை

இதயம் மாறியதோ எல்லை மீறியதோ
இதயம் மாறியதோ எல்லை மீறியதோ

புதிய பாடம் விரக தாபம்
புதிய பாடம் விரக தாபம் போதையேறியதோ

மனசு மயங்கும் மெளன கீதம் பாடு
மன்மதக் கலையில் சிப்பிக்குள் முத்து தேடு

காதல் எங்கே பலவகை
உனக்கு மட்டும் புதுவகை
உனக்கு மட்டும் புதுவகை
காமன் கலைகளும் எத்தனை
பழக வேண்டும் அத்தனை
பழக வேண்டும்.

காதல் யாகங்களோ காம வேதங்களோ
காதல் யாகங்களோ காம வேதங்களோ

உனக்குள் மறைந்து உயிரில் கரைந்து
உனக்குள் மறைந்து உயிரில் கரைந்து
உருகும் நேரங்களோ

மனசு மயங்கும்
மனசு மயங்கும்
மெளன கீதம்
மெளன கீதம்
மனசு மயங்கும் மெளன கீதம் பாடு

மன்மதக் கடலில்
மன்மதக் கடலில்
சிப்பிக்குள் முத்து
சிப்பிக்குள் முத்து
மன்மதக் கடலில் சிப்பிக்குள் முத்து தேடு

இதழில் தொடங்கு எனக்குள் அடங்கு
இதழில் தொடங்கு எனக்குள் அடங்கு
சுகங்கள் இருமடங்கு


கண்ணே கலை மானே

படம் : மூன்றாம் பிறை


கண்ணே கலை மானே கன்னி மயில்லென்ன
கண்டேன் உனை நானே [௨]
அந்தி பகல் உன்னை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்

ராரி றாரோ ஒ ராரி ரோ ராரி றாரோ ஒ ராரி ரோ

ஊமை என்றால் ஒரு வகை அமைதி
பேதை என்றால் அதிலொரு அமைதி
நீயோ கிளி பேடு பண்பாடும் ஆனந்த குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது
பேதை போல விதி செய்தது

கண்ணே கலை மானே கன்னி மயில்லென்ன
கண்டேன் உனை நானே
அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்
ராரி றாரோ ஒ ராரி ரோ ராரி றாரோ ஒ ராரி ரோ

காதல் கொண்டேன்
கனவினை வளர்த்தேன்
கனமணி உனை நான்
கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன்
எந்நாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி
நீ தான் என்றும் என் சந்நிதி

கண்ணே கலை மானே
கன்னி மயிலென்ன
கண்டேன் உனை நானே
அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்

பச்ச மலப் பூவு நீ

படம் : கிழக்கு வாசல்

பச்ச மலப் பூவு நீ உச்சி மலத் தேனு
குத்தங்கொற ஏது நீ நந்தவனத் தேரு
அழகே பொன்னுமணி சிரிச்சா வெள்ளிமணி
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய்

(பச்ச மல)

காத்தோடு மலராட கார்குழலாட
காதோரம் லோலாக்கு சங்கதி பாட
மஞ்சளோ தேகம் கொஞ்சவரும் மேகம்
அஞ்சுகம் தூங்க கொண்டுவரும் ராகம்
நிலவ வான் நிலவ நான் புடிச்சு வாரேன்
குயிலே பூங்குயிலே பாட்டெடுத்துத் தாரேன் ஹோய்

(பச்ச மல)

மூனாக்கு மொகம் பார்த்து வெண்ணிலா நாண
தாளாம தடம்பார்த்து வந்தவழி போக
சித்திரத்துச் சோல முத்துமணி மால
மொத்ததுல தாரேன் துக்கமென்ன மானே
வண்ணமா வானவில்லில் நூலெடுத்து வாரேன்
விண்ணில மீன் புடிச்சு சேல தெச்சுத் தாரேன் ஹோய்

(பச்ச மல)

வா வா அன்பே அன்பே

படம் : அக்னி நட்சத்திரம்.
இசை : இளையராஜா.
குரல் : கே.ஜே.யேசுதாஸ், சித்ரா



வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம்
எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசம்

(வா வா அன்பே அன்பே...)

நீலம் கொண்ட கண்ணும் நேசம் கொண்ட நெஞ்சும்
காலம் தோறும் என்னைச் சேரும் கண்மணி
பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரைக்கூறும் பொன்மணி

காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்
காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்

நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே
நீயின்றி ஏது பூவைத்த மானே
இதயம் முழுதும் எனது வசம்

(வா வா அன்பே அன்பே...)

கண்ணன் வந்து துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம்
கானல் அல்ல காதல் என்னும் காவியம்
அன்றும் இன்றும் என்றும் உந்தன் கையில் தஞ்சம்
பாவை அல்ல பார்வை பேசும் ஓவியம்

காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது
காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது

உன் தோளில் தானே பூமாலை நானே
சூடாமல் போனால் வாடாதோமானே
இதயம் முழுதும் எனது வசம்

(வா வா அன்பே அன்பே...)


Get Your Own Hindi Songs Player at Music Plugin

Friday, May 29, 2009

தூங்காத விழிகள் ரெண்டு

படம் : அக்னி நட்சத்திரம்


தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று

மாமர இலை மேலே ..ஆ...ஆ...ஆ
மாமர இலை மேலே மார்கழி பனிபோலே
பூமகள் மடி மீது நான் தூஙவோ
மாமர இலை மேலே மார்கழி பனிபோலே
பூமகள் மடி மீது நான் தூஙவோ
ராத்திரி பகலாக ஒருபோதும் விலகாமல்
ராஜனை கையேந்தி தாலாட்டவோ
நாளும் நாளும் ராகம் தாளம்
சேரும் நேரம் தீரும் பாரம்
ஆஆ...ஆஆ...ஆ...

தூங்காத விழிகள்..........

ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேறும் நிலை என்னவோ
ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேரும் கதை அல்லவோ
மாதுளம் கனியாட, மலராட, கொடியாட
மாருதம் உறவாடும் கலை என்னவோ
வாலிபம் தடுமாற ஒருபோதை தலைக்கேற
வார்த்தையில் விளஙாத சுவையல்லவோ
மேலும் மேலும் மோகம் கூடும்
தேகம் யாவும் கீதம் பாடும்
ஆஆ...ஆஆ...ஆ..

தூங்காத விழிகள்............

ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

படம்: அரங்கேற்ற வேளை
பாடல்: ஆகாய வெண்ணிலாவே!


ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட
உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட
ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ


தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் உண்டு
பூவாரம் சூடிக்கொண்டு தலை வாசல் வந்ததின்று

தென்பாண்டி மன்னன் என்று தினம் மேனி வண்ணம் கண்டு
மாடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று

இளநேரம் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்
கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்

கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட
நடு சாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட


ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்
ஆதாதி தேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்

வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு காணம் கிளி பேச்சை கூட்டக் கூடும்

அடியாளின் ஜீவன் ஏறி அதிகாரம் செய்வதென்ன?
அலங்கார தேவ தேவி அவதாரம் செய்வதென்ன

இசை வீணை வாடுதோ இதமான கைகளில் மீட்ட
சுதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட

ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட
உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட
ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

Saturday, May 23, 2009

என் மேல் விழுந்த மழைத் துளியே

பாடியவர்கள்: பி. ஜெயச்சந்திரன், சித்ரா.
வரிகள்: வைரமுத்து
இசை: A.R. ரஹ்மான்
படம் : மே மாதம்


என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்
உனக்குள் தானே நான் இருந்தேன்

என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

மண்ணை திறந்தால் நீர் இருக்கும் என்
மனதை திறந்தால் நீ இருப்பாய்

ஒலியை திறந்தால் இசை இருக்கும் என்
உயிரை திறந்தால் நீ இருப்பாய்

வானம் திறந்தால் மழை இருக்கும் என்
மனதைத் திறந்தால் நீ இருப்பாய்

இரவை திறந்தால் பகல் இருக்கும் என்
இமையைத் திறந்தால் நீ இருப்பாய்

என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

இலையும் மலரும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
அலையும் கரையும் உரசுகையில்
பேசும் பாஷை பேசிடுமோ

மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
பார்வை ரெண்டும் பேசிக் கொண்டால்
பாஷை ஊமையாய் விடுமோ

என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்
உனக்குள் தானே நான் இருந்தேன்

என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

மனம் விரும்புதே உன்னை

படம்: நேருக்கு நேர்
இசை: தேவா
வரிகள்: வைரமுத்து
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், ஹரிணி


மனம் விரும்புதே உன்னை... உன்னை
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா


(மனம்.....)


அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது
அதிலே என் மனம் தெளியும் முன்னே
அன்பே உந்தன் அழகு முகத்தை
யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது
புயல் வந்து போனதொரு வனமாய்
ஆனதடா என்னுள்ளம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்
என் நிலைமை அது சொல்லும்
மனம் ஏங்குதே... மனம் ஏங்குதே....
மீண்டும் காண.... மனம் ஏங்குதே...


(நினைத்தாலே.....)


மழையோடு நான் கரைந்ததுமில்லை
வெயிலோடு நான் உருகியதில்லை
பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா
மலைநாட்டுக் கரும்பாறை மேலே
தலை காட்டும் சிறு பூவைப்போலே
பொல்லாத இளங்காதல் பூத்ததடா
சட்டென்று சலனம் வருமென்று
ஜாதகத்தில் சொல்லலையே...
நெஞ்சோடு காதல் வருமென்று
நேற்றுவரை நம்பலையே
என் காதலா...! என் காதலா.....!
நீ வா! நீ வா! என் காதலா...!


(நினைத்தாலே.....)

விழிகளின் அருகினில் வானம்!

படம்: அழகிய தீயே
இசை: ரமேஷ் விநாயகம்
வரிகள்: கவிவர்மன்
பாடியவர்கள்: ரமேஷ் விநாயகம்


விழிகளின் அருகினில் வானம்!
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்!
இது ஐந்து புலன்களின் ஏக்கம்!
என் முதல் முதல் அனுபவம்... ஓ.... யா!

ஒலியின்றி உதடுகள் பேசும்!
பெரும் புயல் என வெளிவரும் சுவாசம்!
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்!
இது அதிசய அனுபவம்... ஓ.... யா!

பெண்ணை சந்தித்தேன்!
அவள் நட்பை யாசித்தேன்!
அவள் பண்பை நேசித்தேன்!
வேறென்ன நான் சொல்ல... ஓ.... யா!

பூ போன்ற கன்னி தேன்,
அவள் பேர் சொல்லி தித்தித்தேன்!
அது ஏன் என்று யோசித்தேன்!
அட நான் எங்கு சுவாசித்தேன்?

காதோடு மெளனங்கள்,
இசை வார்க்கின்ற நேரங்கள்,
பசி, நீர் தூக்கம் இல்லாமல்,
உயிர் வாழ்கின்ற மாயங்கள்!

அலைகடலாய் இருந்த மனம்,
துளி துளியாய் சிதறியதே!
ஐம்புலனும், என் மனமும்,
எனக்கெதிராய் செயல்படுதே!

விழி காண முடியாத மாற்றம்!
அதை மூடி மறைக்கின்ற தோற்றம்!
ஒரு மெளன புயல் வீசுதே!
அதில் மனம் தட்டு தடுமாறும்... ஓ.... யா!

பூவில் என்ன புத்தம் புது வாசம்!
தென்றல் கூட சங்கீதமாய் வீசும்!
ஏதோ வந்து பன்னீர் மழை தூவும்!
யாரோ என்று எந்தன் மனம் தேடும்!

கேட்காத ஓசைகள்,
இதழ் தாண்டாத வார்த்தைகள்,
இமை ஆடாத பார்வைகள்,
இவை நான் கொண்ட மாற்றங்கள்!

சொல் என்னும் ஓர் நெஞ்சம்!
இனி நில் என ஓர் நெஞ்சம்!
எதிர்பார்க்காமல் என் வாழ்வில்,
ஒரு போர்க்காலம் ஆரம்பம்!

இருதயமே துடிக்கிறதா?
துடிப்பது போல் நடிக்கிறதா?
உரைத்திடவா? மறைத்திடவா?
ரகசியமாய் தவித்திடவா?

ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்?
எனை கத்தி இல்லாமல் கொய்யும்!
இதில் மீள வழி உள்ளதே,
இருப்பினும், உள்ளம் விரும்பாது.. ஓ... யா!

விழிகளின் அருகினில் வானம்!
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்!
இது ஐந்து புலன்களின் ஏக்கம்!
என் முதல் முதல் அனுபவம்... ஓ.... யா!

ஒலியின்றி உதடுகள் பேசும்!
பெரும் புயல் என வெளிவரும் சுவாசம்!
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்!
இது அதிசய அனுபவம்... ஓ.... யா!

பெண்ணை சந்தித்தேன்!
அவள் நட்பை யாசித்தேன்!
அவள் பண்பை நேசித்தேன்!
வேறென்ன நான் சொல்ல... ஓ.... யா!

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்

படம்: அயன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள்: நா.முத்துகுமார்
பாடியவர்: கார்த்திக்


விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்
பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழைக் காலம்
என் வாழ்வில் வருமா

மழைக் கிளியே மழைக் கிளியே
உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே
நான் என்னைக் கண்டேனே செந்தேனே

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்
பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழைக் காலம்
என் வாழ்வில் வருமா

மழைக் கிளியே மழைக் கிளியே
உன் கண்ணைக் கண்டேனே
விழி வழியே விழி வழியே
நான் என்னைக் கண்டேனே செந்தேனே

கடலாய்ப் பேசிடும் வார்த்தைகள் யாவும்
துளியாய்த் துளியாய் குறையும்
மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே
தானாய் எந்தன் கால் இரண்டும்
உந்தன் திசையில் நடக்கும்
தூரம் நேரம் காலம் எல்லாம் சுருங்கிடுமே
இந்தக் காதல் வந்துவிட்டால்
நம் தேகம் மிதந்திடுமே
விண்ணோடும் முகிலோடும் விளையாடித் திரிந்திடுமே

ஒ ..ஒ ..ஒ ..

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே
தனியாகப் பேசிடும் சந்தோசம் தந்தாய்
பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழைக் காலம்
என் வாழ்வில் வருமா

மழைக் கிளியே மழைக் கிளியே
உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே
நான் என்னைக் கண்டேனே செந்தேனே

ஆசை என்னும் தூண்டில் முள் தான்
மீனாய் நெஞ்சை இழுக்கும்
மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட
மனம் துடிக்கும்
சுற்றும் பூமி என்னை விட்டு
தனியாய் சுற்றிப் பறக்கும்
நின்றால் நடந்தால் நெஞ்சில் ஏதோ
புது மயக்கம்
இது மாய வலை அல்லவா
புது மோக நிலை அல்லவா
உடை மாறும் நடை மாறும்
ஒரு பாரம் என்னைப் பிடிக்கும்

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே
தனியாகப் பேசிடும் சந்தோசம் தந்தாய்
பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழைக் காலம்
என் வாழ்வில் வருமா

எங்கே என் புன்னகை

படம்: தாளம்
இசை: A.R. ரஹ்மான்
வரிகள்: வைரமுத்து
பாடியவர்கள்: S.P. பாலசுப்ரமணியம், ஷோபா


எங்கே என் புன்னகை
எவர் கொண்டு போனது
தீ பட்ட மேகமாய்
என் நெஞ்சு ஆனது
மேக தீ அணைக்க வா வா வா வா
தாளத்தில் நீ சேரவா ஓ
தாளிசை நான் பாடவா

[எங்கே என் புன்னகை...]

மழை நீரில் மேகமோ
தெப்பம் போல் நனைந்தது
தெப்பம் போல் நனைந்ததில்
வெட்கம் ஏன் கரைந்தது
மழை நீரில் மேகமோ
தெப்பம் போல் நனைந்தது
தெப்பம் போல் நனைந்ததில்
வெட்கம் ஏன் கரைந்தது
என் நாடி போலவே என் நெஞ்சம் குலைந்தது
நீ செய்யும் லீலையை நீர் செய்ய மனம் ஏங்குது
முதிலையில் நனைந்ததை முத்தத்தால் காயவை
எந்தன் தனிமையை தோள் செய்யவா
தாளத்தில் நீ சேரவா ஓ
தாளிசை நான் பாடவா

பனி சிந்தும் சூரியன் அது உந்தன் பார்வையோ
பூக்களின் ராணுவம் அது உந்தன் மேனியோ
பனி சிந்தும் சூரியன் அது உந்தன் பார்வையோ
பூக்களின் ராணுவம் அது உந்தன் மேனியோ
கண்ணே உன் நெஞ்சமோ கடல் கொண்ட ஆழமோ
நம் சொந்தம் கூடுமோ
ஒளியின் நிழல் ஆகுமோ
காதல் மழை பொழியுமோ
கண்ணீரில் இரங்குமோ
அது காலத்தின் முடிவல்லவோ
தாளத்தில் நீ சேரவா ஓ
தாளிசை நான் பாடவா

[எங்கே என் புன்னகை...]

Friday, May 22, 2009

தென்றல் உறங்கிய போதும்

படம்: பெற்ற மகனை விற்ற அன்னை.
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி.


தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா? காதல் கண்கள் உறங்கிடுமா..? காதல் கண்கள் உறங்கிடுமா...
தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா
ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா

நீல இரவிலே தோன்றும் நிலவைப் போலவே.. நிலவைப்போலவே
வாலை குமரியே நீயும் வந்த போதிலே .. வந்தபோதிலே
நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா
நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா
அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா

இதய வானிலே இன்ப தனம்? கோடியே ... தனம் கோடியே
உதயமாகியே ஊஞ்சல் ஆடும் போதிலே ... ஆடும் போதிலே
வானம்பாடி ஜோடி நாமும் பாட மயங்குமா
வாசப்பூவும் தேனும் போல வாழ பழகுமா
வானம்பாடி ஜோடி நாமும் பாட மயங்குமா
வாசப்பூவும் தேனும் போல வாழ பழகுமா
அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா
ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா

Saturday, May 16, 2009

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

பாடல் : சொர்க்கத்தின் வாசப்படி
படம் : உன்னை சொல்லி குற்றமில்லை
இசை : இளையராஜா
குரல் : யேசுதாஸ்,சித்ரா
பாடசாசிரியர் : வாலி


சொர்க்கத்தின் வாசற்படி,
எண்ணக்கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி,
எண்ணக்கனவுகளில்
பெண்ணல்ல நீ எனக்கு,
வண்ணக்களஞ்சியமே
சின்ன மலர்க்கொடியே,
நெஞ்சில் சிந்தும் பனித்துளியே

சொர்க்கத்தின் வாசற்படி,எண்ணக்கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி,எண்ணக்கனவுகளில்

உன்னாலே உண்டாகும் ஞாபகங்கள்,
ஒன்றிரண்டு அல்லவே
ஒன்றுக்குள் ஒன்றான நீரலைகள்
என்றும் இரண்டல்லவே
சிற்றன்னவாசலின் ஓவியமே,
சிந்தைக்குள் ஊரிய காவியமே
எங்கே நீ அங்கேதான் நான் இருப்பேன்,
எப்போதும் நீ ஆட தோள் கொடுப்பேன்
மோகத்தில் நான் படிக்கும் மாணிக்கவாசகமே,
நான் சொல்லும் பாடலெல்லாம்,
நீ தந்த யாசகமே

சொர்க்கத்தின் வாசற்படி,
எண்ணக்கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி,
எண்ணக்கனவுகளில்
பெண்ணல்ல நான் உனக்கு,
வண்ணக்களஞ்சியமே
சிந்தும் பனித்துளியே,
நெஞ்சில் சேரும் இளங்கிளியே

சொர்க்கத்தின் வாசற்படி,
எண்ணக்கனவுகளில்

உன்னாலே நான் கொண்ட காயங்களை
முன்னும் பின்னும் அறிவேன்
கண்ணாலே நீ செய்யும் மாயங்களை
இன்றும் என்றும் அறிவேன்
மின்சாரம் போல் எனை தாக்குகிறாய்,
மஞ்சத்தை போர்க்களம் ஆக்குகிறாய்
கண்ணே உன் கண் என்ன வேலினமோ,
கை தொட்டால்,மெய் தோட்டால்,மீட்டிடுமோ
கோட்டைக்குள் நீ புகுந்து,
வேட்டைகள் ஆடுகிறாய்
நான் இங்கு தோர்த்துவிட்டேன்,
நீ என்னை ஆளுகிறாய்


சொர்க்கத்தின் வாசற்படி,
எண்ணக்கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி,
எண்ணக்கனவுகளில்
பெண்ணல்ல நீ எனக்கு,
வண்ணக்களஞ்சியமே
சிந்தும் பனித்துளியே,
என்னை சேரும் இளங்கிளியே

சொர்க்கத்தின் வாசற்படி,
எண்ணக்கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி.......

சங்கத்தமிழ் கவியே சந்தங்கள்

படம் : மனதில் உறுதி வேண்டும்
இசை : இளையராஜா
குரல் : ஜேசுதாஸ், சித்ரா
வரிகள் : வாலி



சங்கத்தமிழ் கவியே சந்தங்கள்
சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால்
தாகம் அடங்கிடுமோ
சங்கத்தமிழ் கவியே சந்தங்கள்
சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால்
தாகம் அடங்கிடுமோ
சங்கத்தமிழ் கவியே...

மாதுளம் பூவிருக்க அதற்குள்
வாசனை தேனிருக்க
பாதியை நானெடுக்க மெதுவாய்
மீதியை நீ கொடுக்க
காதலன் கண்ணுறங்க தலைவி
கூந்தலில் பாய் விரிக்க
ஒருபுறம் நான் அணைக்க...ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஒருபுறம் நான் அணைக்க
தழுவி மறுமுறம் நீ அணைக்க
சாத்திரம் மீறிய கீர்த்தனம் பாட
சுகங்களில் லயிப்பவள் நான்
சங்கத்தமிழ் கவியே...சங்கத்தமிழ் கவியே

பூங்குயில் பேடைதனை சேரத்தான்
ஆண்குயில் பாடியதோ
ஓடத்தை போல் நானும் ஆடத்தான்
ஓடையும் வாடியதோ
காதலன் கை தொடத்தான்...காதலன் கை தொடத்தான்
இந்த கண்களும் தேடியதோ
நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே
பார்வையை ஓட விட்டேன்
நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே
பார்வையை ஓட விட்டேன்
தோழியர் யாவரும் கேலிகள் பேச
தினம் தினம் நான் தவித்தேன்

சங்கத்தமிழ் கவியே சந்தங்கள்
சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால்
தாகம் அடங்கிடுமோ
சங்கத்தமிழ் கவியே சந்தங்கள்
சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால்
தாகம் அடங்கிடுமோ
சங்கத்தமிழ் கவியே...


என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட

ஆ ஆ ....ஆ ஆ ஆ ...

ஆ ஆ ஆ ஆ .....ஆ ஆ ஆ ஆ ஆ ....

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பெரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட கண்ணன் ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
அன்பே ஓடி வா ...அன்பால் கூட வா ...
ஓ ...பைங்கிளி ...நிதமும்

(என்னைத் தொட்டு )

சொந்தம் பந்தம் உன்னை தாலாட்டும் தருணம்
சொர்க்கம் சொர்க்கம் என்னை சீராட்ட வரணும்
பொன்னி பொன்னி நதி நீராட வரணும்
என்னை என்னை நிதம் நீ ஆள வரணும்
பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை
அள்ளித் தர தானாக வந்து விடு ...
என்னுயிரை தீயாக்கும் மன்மத பானத்தை
கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்து விடு ...
அன்பே ஓடி வா ...
அன்பால் கூட வா ...
அன்பே ஓடி வா ...அன்பால் கூட வா .(2)..
ஓ ...பைங்கிளி ...நிதமும்

என்னைத் தொட்டு ...
நெஞ்சைத் தொட்டு ...

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி..

ஆ ஆ ஆ அ ....ஆ ஆ ஆ ஆ ஆ அ ...ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே ...
ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே ...
மின்னல் மின்னல் கோடி போலாடும் அழகே ...
கண்ணால் கண்ணால் மொழி நீ பாடு குயிலே ...
கட்டுக்குள்ள நிற்காது திரிந்த காளையை
கட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே ...
அக்கறையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை
கட்டி அணைகட்டி வைத்த பைங்கிளியே ...
என்னில் நீயடி ...
உன்னில் நானடி ...
என்னில் நீயடி . ..உன்னில் நானடி ...
ஓ பைங்கிளி ... நிதமும்

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி ..
அன்பே ஓடி வா ...அன்பால் கூட வா ...
ஓ ...பைங்கிளி ...நிதமும்
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி...


மணியே மணிக்குயிலே

படம் : நாடோடித் தென்றல்

மணியே மணிக்குயிலே, மாலையிளங்கதிரழகே!
கொடியே கொடிமலரே, கொடியிடையின் நடையழகே !
மணியே, மணிக்குயிலே, மாலையிளங்கதிரழகே!
கொடியே, கொடிமலரே, கொடியிடையின் நடையழகே!

தொட்ட இடம் பூமணக்கும்;துளிர்க்கரமோ தொட இனிக்கும்;
பூமரப் பாவை நீயடி, இங்கு நான் பாடும் -
பாமரப் பாடல் கேளடி..

ஒஓ ஒஒ ஒஒஓ..

மணியே, மணிக்குயிலே, மாலையிளம் கதிரழகே!
கொடியே, கொடிமலரே, கொடியிடையின் நடையழகே!

பொன்னில் வடித்த சிலையே!ப்ரம்மன் படைத்தான் உனையே!
வண்ணமயில் போல வந்த பாவையே..
எண்ண இனிக்கும் நிலையே!இன்பம் கொடுக்கும் கலையே!
உன்னை எண்ணி வாழும் எந்தன் ஆவியே..

கண்ணிமையில் தூண்டிலிட்டு,காதல்தனை தூண்டிவிட்டு,
எண்ணி எண்ணி ஏங்கவைக்கும், ஏந்திழையே!

பெண்ணிவளை ஆதரித்து,பேசித்தொட்டுக் காதலித்து,
இன்பம்கொண்ட காரணத்தால், தூங்கலையே!

சொல்லிச் சொல்லி ஆசை வைத்தேன்,
துடியிடையில் பாசம் வைத்தேன்,
பூமரப் பாவை நீயடி, இங்கு நான் பாடும் -
பாமரப் பாடல் கேளடி..


ஒஓ ஒஒ ஒ
மணியே மணிக்குயிலே, மாலையிளம் கதிரழகே!
கொடியே கொடிமலரே, கொடியிடையின் நடையழகே!
தொட்ட இடம் பூமணக்கும்;துளிர்க்கரமோ தொட இனிக்கும்

பூமரப் பாவை நீயடி, இங்கு நான் பாடும் -பாமரப் பாடல் கேளடி..


ஆஆஅ ஆஆ...

கண்ணிமைகளை வருத்தி,கனவுகளைத் துரத்தி,
மென்மனதினால் முடித்த மூக்குத்தி..
என்னுயிரிலே ஒருத்தி,கண்டபடி எனைத் துரத்தி,
அம்மனவள் வாங்கிக்கொண்ட மூக்குத்தி..
கோடிமணி ஓசைநெஞ்சில்,கூடிவந்துதான் ஒலிக்க,
ஓடிவந்து கேட்கவரும், தேவதைகள்

சூடமலர் மாலை கொண்டு,தூபமிட்டு தூண்டிவிட்டு,
கூடவிட்டு வாழ்த்தவரும், வானவர்கள்

அந்தி வரும் நேரமம்மா,ஆசைவிளக்கேற்றுதம்மா,

பூமரப் பாவை நீயடி, இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி..


ஒஓ ஒஒ ஒஒஓ..
மணியே மணிக்குயிலே, மாலையிளம் கதிரழகே!
மணியே மணிக்குயிலே, மாலையிளம் கதிரழகே!
தொட்ட இடம் பூமணக்கும்;துளிர்க்கரமோ தொட இனிக்கும்;

பூமரப் பாவை நீயடி, இங்கு நான் பாடும் -பாமரப் பாடல் கேளடி..

ஒஓ ஒஒ ஒஒஓ..
னானன னான னான னா,

நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு

படம் : பொன்னுமணி
பாடல் : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு


மாலையில் யாரோ மனதோடு பேச

படம் - சத்ரியன்
பாடியவர் - சுவர்ணலதா


மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் பூத்ததே ஓ.....மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ.....மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது - அதில்
நாயகன் பேரெழுது

வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாடலை
ஒருநாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசை காதலை
நெஞ்சமே பாட்டெழுது - அதில்
நாயகன் பேரெழுது (மாலையில் யாரோ)


கரை மேல் நானும் காற்று வாங்கி விண்ணைப்பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப்பார்க்க
அடடா நானும் மீனைப்போல கடலில் பாயக்கூடுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல உடலின் மீது ஆடுமோ
நெஞ்சமே பாட்டெழுது - அதில்
நாயகன் பேரெழுது (மாலையில் யாரோ)

நீ பாதி நான் பாதி கண்ணே..

படம் : கேளடி கண்மணி
குரல் : ஜேசுதாஸ், உமா ரமணன்
இசை : இளையராஜா


நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீயிலையே இனி நானில்லையே உயிர் நீ..யே

நீ பாதி நான் பாதி கண்ண
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே


மாஅன பறவை வாழ நினைதால் வாசல் திரக்கும்
வேடந்தாங்கல்
கான பறவை பாட நினைதால் கையில் விழுந்த
பருவ பாடல்
மஞ்சள் மணக்கும் என் நெட்றி வைத பொட்டுக்கொரு
அர்தமிருக்கும் உன்னாலே

மெல்ல சிரிக்கும் உன் முது நஹை ரதினதை அள்ளி
தெளிக்கும் முன்னாலே
மெய்யா..நது உயிர் மெய்யா..கவே தடை யேது

நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீ பாதி நான் பாதி கண்ண
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

இடது விலியில் தூசி விலுந்தல் வலது விலியும்
கலங்கி விடுமே
இருடில் கூட இருகும் நிலல் நான் இருதி வரிகும்
டொடர்ந்துவருவென்
சுகம் எதுகு பொன்னுலகம் தெனுருவில் பகம் இருகு கானே

இந்த மனம்தன் எந்தன் மனவனும் வந்து உலவும்
நந்தவனம் தன் அன்பே வ
சுமையனது ஒரு சுகமனது சுவை நீதன்

நீ பாதி நான் பாதி கண்ண
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீயிலையே இனி நானில்லையே உயிர் நீ..யே

நீ பாதி நான் பாதி கண்ண
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே


தென்றல் உறங்கிய போதும்

படம்: பெற்ற மகனை விற்ற அன்னை
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர்கள்: AM ராஜா, P சுசீலா
பாடலாசிரியர்: மருதக்காசி


தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா? காதல் கண்கள் உறங்கிடுமா..?
காதல் கண்கள் உறங்கிடுமா...
(தென்றல்..)
ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா..
காதல் கண்கள் உறங்கிடுமா..
(ஒன்று..)

நீல இரவிலே தோன்றும் நிலவைப் போலவே.. நிலவைப்போலவே
வாலை குமரியே நீயும் வந்த போதிலே .. வந்தபோதிலே
நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா
நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா
அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா..
காதல் கண்கள் உறங்கிடுமா

இதய வானிலே இன்ப கனவு கோடியே ... கனவு கோடியே
உதயமாகியே ஊஞ்சல் ஆடும் போதிலே ... ஆடும் போதிலே
வானம்பாடி ஜோடி நாமும் பாட மயங்குமா
வாசப்பூவும் தேனும் போல வாழ பழகுமா
வானம்பாடி ஜோடி நாமும் பாட மயங்குமா
வாசப்பூவும் தேனும் போல வாழ பழகுமா
அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா
ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா

கண்ணனே நீ வர காத்திருந்தேன்

படம் : தென்றலே என்னை தொடு
குரல் : ஜேசுதாஸ், உமா ரமணன்
இசை : இளையராஜா


கண்ணனே நீ வர காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்விழித் தாமரை பூத்திருந்தேன்
என்னுடல் வேர்த்திருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்
மன்னவன் ஞாபகமே
கற்பனை மேடையில் கண்டிருந்தேன்
மன்மத நாடகமே
அந்திப்பகல்...கண்ணிமையில்...
உன்னருகே...ஹே
கண்மணி நீ வர காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்

நீலம் பூத்த ஜாலப்பார்வை மானா மீனா
நான்கு கண்கள் பாடும் பாடல் நீயா நானா
நீலம் பூத்த ஜாலப்பார்வை மானா மீனா
நான்கு கண்கள் பாடும் பாடல் நீயா நானா
கள்ளிருக்கும்...பூவிது பூவிது
கையணைக்கும்...நாளிது நாளிது
பொன்னென மேனியில்...மின்னிட மின்னிட
மெல்லிய நூலிடை...பின்னிட பின்னிட
வாடையில் வாடிய...ஆடையில் மூடிய தேன்...நான்

கண்மணி நீ வர காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்விழித் தாமரை பூத்திருந்தேன் என்னுடல் வேர்த்திருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மங்கையின் ஞாபகமே
கற்பனை மேடையில் கண்டிருந்தேன் மன்மத நாடகமே
பொன்னழகே...பூவழகே...என்னருகே...ஹே
கண்ணனே நீ வர காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன்

ஆசை தீர வேண்டும் வரவா வரவா
நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா மெதுவா
ஆசை தீர வேண்டும் வரவா வரவா
நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா மெதுவா
பெண் மயங்கும்...நீ தொட நீ தொட
கண் மயங்கும்...நான் வர நான் வர
அங்கங்கு வாலிபம்...பொங்கிட பொங்கிட
அங்கங்கள் யாவிலும்...தங்கிட தங்கிட
தோள்களில் சாய்ந்திட...தோகையை ஏந்திட யார்...நீ

கண்ணனே நீ வர காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்விழித் தாமரை பூத்திருந்தேன் என்னுடல் வேர்த்திருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மன்னவன் ஞாபகமே
கற்பனை மேடையில் கண்டிருந்தேன் மன்மத நாடகமே
அந்திப்பகல்...கண்ணிமையில்...உன்னருகே...ஹே

கண்மணி நீ வர காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்விழித் தாமரை பூத்திருந்தேன் என்னுடல் வேர்த்திருந்தேன்

சிப்பி இருக்குது முத்தும் இருக்குது

படம் : வறுமையின் நிறம் சிகப்பு
இயற்றியவர் : கண்ணதாசன்
இசை : மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன்
பாடியவர்கள் : எஸ்பிபி பாலசுப்ரமணியம் எஸ் ஜானகி
வெளியான ஆண்டு : 1980



தந்தன தத்தன தைய்யன தத்தன தான தத்தன தான தையன்ன தந்தனா
ஓ ஓ

சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி
ல ல ல ல ல ல லா ல ல ல லா
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி

சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி

எப்படி

சந்தங்கள் ன ன நீயானால்
ரீசரி சங்கீதம் ம்ம்ம் நானாவேன்
சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன்

சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி

னன னன னனா னனா
comeon sweet once again
னன னன னனா னனா
சிரிக்கும் சொர்க்கம்
தர னன னன தர்ர ர னன னன
தங்க தட்டு எனக்கு மட்டும்
தானே தானே தான
தேவை பாவை பார்வை
தத்தன தான்ன
நினைக்கவேய்த்து
லால்ல லல்லா ல ல
நெஞ்சில் நின்று நெருங்கி வந்து
ன ன ன ன ன ன தனன்ன ல ல ன ன
beautiful
மயக்கம் தந்தது யார் தமிழோ அமுதோ கவியோ

சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி

சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி
சந்தங்கள் ஹா ஹா நீயானால் ஹா ஹா
சங்கீதம் ஹா ஹா நானாவேன் ஹா ஹா

இப்ப பார்க்கலாம்

தனன்ன தனன்ன ன ன
மழையும் வெயிலும் என்ன
தன்னானன தனன்ன ன ன
உன்னை கண்டால் மலரும் முள்ளும் என்ன
தனன்னான தனன்னான தன்னா
தனன்னானன தனன்னானன தான
ரதியும் நாடும் அழகில் ஆடும் கண்கள்
சபாஷ்
கவிதை உலகம் கெஞ்சும்
உன்னை கண்டால் கவிஞர் இதயம் கொஞ்சும்

கொடுத்த சந்தங்களில் என் மனதை
நீ அறிய நான் உரைத்தேன்
கொடுத்த சந்தங்களில் என் மனதை
நீ அறிய நான் உரைத்தேன்


சின்னஞ் சிறு வயதில் எனக்கோர்

பாடல்: கண்ணதாசன்
இசை: இளையராஜா
குரல்: K.J.ஜேசுதாஸ், வாணி ஜெயராம், S.P.சைலஜா(?)
படம்: மீண்டும் கோகிலா(1981)

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...

சின்னஞ் சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி [*2]

மோகனப் புன்னகையில் ஓர் நாள் மூன்று தமிழ் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர் தத்துவம் சொல்லி வைத்தான்
உள்ளத்தில் வைத்திருந்தும் நானோர் ஊமையைப் போலிருந்தேன்
ஊமையைப் போலிருந்தேன் .... ம்... ம் ....
ஆ .... ஆ ....
கள்ளத்தனம் என்னடி எனக்கோர் காவியம் சொல்லு என்றான்
சின்னஞ் சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

வெள்ளிப் பனியுருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன்
வெள்ளிப் பனியுருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன்
பள்ளித்தலம் வரையில் செல்லம்மா பாடம் பயின்று வந்தேன்
காதல் நெருப்பினிலே எனது கண்களை விட்டுவிட்டேன்
மோதும் விரகத்திலே ... மோதும் விரகத்திலே செல்லம்மா ம்ம்ம்......

சின்னஞ் சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி

வரிகள்: சுப்ரமணிய பாரதியார்
படம்: கண்ணே கனியமுதே

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி – கண்ணம்மா
தன்னையே சசியென்று சரணம் எய்தினேன்
(நின்னையே)

பொன்னையே நிகர்த்த மேனி
மின்னையே நிகர்த்த சாயல்
பின்னையே நித்ய கன்னியே
கண்ணம்மா

மாரனம்புகள் என் மீது வாரி வாரி வீசநீ
கண் பாராயோ வந்து சேராயோ
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா

யாவுமே சுகமுனிக்கோர் ஈசனாம் எனக்குன் தோற்றம்
மேவுமே இங்கு யாவுமே
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
(நின்னையே)

Friday, May 15, 2009

ஆசையினாலே மனம்

ஆசையினாலே மனம் ( ஓஹ் ஹோ )
அஞ்சுது கெஞ்சுது தினம் ( ம்ம் )
அன்பு மீறி போனதாலே அபினயம் குறையுது முகம் ( i see )
ஆசையினாலே மனம்
அஞ்சுது கெஞ்சுது தினம்
அன்பு மீறி போனதாலே அபினயம் குறையுது முகம்

நாணம் கொண்டு ஓடும் கண்கள் தாளம் போடுதே
அதை காணும் தென்றல் காதில் வந்து கானம் பாடுதே
நாணம் கொண்டு ஓடும் கண்கள் தாளம் போடுதே
அதை காணும் தென்றல் காதில் வந்து கானம் பாடுதே
வேறில்லாத கொடி தனில் ( ஓஹ்ஹோ ஹோ )
வாயில்லாத ஒரு அணில் ( ஆஹ்ஹஹா )
ஆளில்லாத நேரம் பார்த்து தாவி பிடிக்குது கையில்

ஆசையினாலே மனம்
அஞ்சுது கெஞ்சுது தினம்
அன்பு மீறி போனதாலே அபினயம் குறையுது முகம்

மாலை என்ற நேரம் வந்து ஆளை மீறுதே
இளம் காளை ஒன்று காதல் என்று கண்ணால் கூறுதே
மாலை என்ற நேரம் வந்து ஆளை மீறுதே
இளம் காளை ஒன்று காதல் என்று கண்ணால் கூறுதே
தேடி வந்த ஒரு துணை ( ஓஹ்ஹோஹோ )
சிரிக்குது மயக்குது எனை ( ஆஹ்ஹ ஹா )
மூடி மூடி வைத்த எண்ணம்
நாடுதே சுகம் தன்னை ( Really? )

ஆசையினாலே மனம்
அஞ்சுது கெஞ்சுது தினம்
அன்பு மீறி போனதாலே அபினயம் குறையுது முகம்
ஆசையினாலே மனம்
அஞ்சுது கெஞ்சுது தினம்
அன்பு மீறி போனதாலே அபினயம் குறையுது முகம்

கல்யாண தேன் நிலா காய்சாத பால் நிலா

படம்:மௌனம் சம்மதம்
பாட்டு:வாலி



கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

தென்பாண்டிக் கூடலா
தேவாரப் பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா

என் அன்புக் காதலா
என்னாளும் கூடலா
பேரின்பம் நெய்யிலா
நீ தீண்டும் கையிலா

பார்ப்போமே ஆவலாய்
வா வா நிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா

உன் தேகம் தேக்கிலா
தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா
நான் கைதிக் கூண்டிலா

சங்கீதம் பாட்டிலா -
நீ பேசும் பேச்சிலா.

என் ஜீவன் என்னிலா
உன் பார்வை தன்னிலா
தேனூறும் ??
உன் சொல்லிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா



Saturday, May 9, 2009

நினைத்தேன் வந்தாய் நூறு வயது

படம் : காவல்காரன்
இசை : எம்.எஸ்.விஸ்வனாதன்
பாடியவர்கள் : டி.எம்.எஸ் & சுசீலா.


நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நூறு நிலாவை ஒரு நிலவாக்கி பாவை என்று
ஆயிரம் மலரை ஒரு மலராக்கி பார்வை என்று
கண் மீனாக மானாக நின்றாடவோ
பொன் தேனாக பாலாக பண்பாடவோ
மாலை நேரம் வந்து உறவாடவோ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓய்யா..
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது

நிலைக்கண்ணாடி கன்னம் கண்டு ஆஹா
மலர்கள்ளூரும் கிண்ணம் என்று ஓஹோ
அது சிந்தாமல் கொள்ளாமல் பக்கம் வா
அன்பு தேனோடை பாய்கின்ற சொர்கம் வா
அது சிந்தாமல் கொள்ளாமல் பக்கம் வா
அன்பு தேனோடை பாய்கின்ற சொர்கம் வா
மன்னன் தோளோடு அள்ளிக் கொஞ்சும் கிள்ளை
அவன் தேரோடு பின்னிச் செல்லும் முல்லை
உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன்
உந்தன் கை கொண்டு உண்ணாத கன்னித்தேன்
உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன்
உந்தன் கை கொண்டு உண்ணாத கன்னித்தேன்
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது

இடை நூலாடி செல்ல செல்ல ஆஹா
அதை மேலாடை மூடிக்கொள்ள ஓஹோ
சின்ன பூமேனி காணாத கண்ணென்ன
சொல்லித் தீராத இன்பங்கள் என்னென்ன
சின்ன பூமேனி காணாத கண்ணென்ன
சொல்லித் தீராத இன்பங்கள் என்னென்ன
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ய்யா
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ய்யா

தோகை இள மயில் ஆடி வருகுது

படம் : பயணங்கள் முடிவதில்லை
பாடியவர் : எஸ் பி பாலசுப்ரமணியம்
இயற்றியவர் : வைரமுத்து
இசை : இளையராஜா
வெளியான ஆண்டு : 1980


தோகை இள மயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ

கோலம் போடும் நாணங்கள் காணாத ஜாலம்
இதழ்களிலே பவுர்ணமி வெளிச்சம்
கண்ணில் துள்ளும் தாளஙள் ஆனந்த மேளம்
இமை பறவை சிறகுகள் அசைக்கும்
விழிகளிலே காதல் விழா நடதுகிறாள் சகுந்தலா
அன்னமே இவளிடம் நடை பழகும்
இவள் நடை அசைவினில் சங்கீதம் உண்டாகும்

……தோகை இள மயில்…………..

பூமி எங்கும் பூந்தோட்டம் நான் காண வேண்டும்
புது தென்றலும் பூக்களில் வசிக்கும்
ஆகாய மேகஙள் நீரூற்ற வேண்டும்
அந்த மழையில் மலர்களும் குளிக்கும்
அருவிகளோ ராகம் தரும் அதில் நனைந்தால் ராகம் வரும்
தேவதை விழியிலே அமுத அலை
கனவுகள் வளர்ந்திடும் கள்ளூரும் உன் பார்வை

……..தோகை இள மயில்………..

இந்த மான் உந்தன் சொந்த மான்

படம்: கரகாட்டக்காரன்
இசை: இளையராஜா
குரல் : இளையராஜா & சித்ரா
வரிகள்: கங்கை அமரன்


இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்துதான் சிந்து பாடும்
இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்துதான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே என்னுயிரே
இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்த மான்
...

வேல்விழி போடும் தூண்டிலே.. நான் விழலானேன் தோளிலே
நூலிடை தேயும் நோயிலே.. நான் வரம் கேட்கும் கோயிலே
அன்னமே.. ஆஆஆஆஆ.. ஆஆஆஆஆ...
ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆ..
அன்னமே எந்தன் சொர்ணமே
உந்தன் எண்ணமே வானவில் வண்ணமே
கன்னமே மதுக்கிண்ணமே
அதில் பொன்மணி வைரங்கள் மின்னுமே
எண்ணமே தொல்லை பண்ணுமே
பெண்ணென்னும் கங்கைக்குள் பேரின்பமே

இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்துதான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவனே
என்னுயிரே
...

பொன்மணி மேகலை ஆடுதே.. உன் விழிதான் இடம் தேடுதே
பெண்ணுடல் பார்த்ததும் நாணுதே.. இன்பத்தில் வேதனை ஆனதே
எண்ணத்தான்.. ஆஆஆஆஆ.. ஆஆஆஆஆ...
ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆ..
எண்ணத்தான் உன்னை எண்ணித்தான்
உடல் மின்னத்தான் வேதனை தின்னத்தான்
சொல்லித்தான் நெஞ்சைக் கிள்ளித்தான்
என்னை சொர்க்கத்தில் தேவனும் சோதித்தான்
ஆ: மோகம்தான் சிந்தும் தேகம்தான்
தாகத்தில் நான் நிற்க ஆனந்தம்தான்

இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்துதான்
சிந்து பாடும்.. இந்த மான்
எந்தன் சொந்த மான்
பக்கம் வந்துதான்
சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
கண்மணியே.. சந்திக்க வேண்டும் தேவியே
என்னவனே

வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே

படம் : மெல்ல திறந்தது கனவு.


வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே

முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்
ஒரு முறையேனும் திருமுகம் காணும்
வரம் தரவேண்டும் எனக்கது போதும்
எனைச்சேர....எனைச்சேர எதிர்பார்த்து முன்னம்
ஏழுயென்மம் ஏங்கினேன்....

வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே

மலர் போன்ற பாதம் நடக்கின்ற போது
நிலம் போல உன்னை நான் தாங்வேண்டும்
இடையினில் ஆடும்.... உடையென நானும்
இணைபிரியாமல் துணைவரவேண்டும்
உனக்காகா.... உனக்காகாப் பனிக்காற்றைத்
தினம் தூது போகவேண்டினேன்....

வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத் தானே வானம்


தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க

படம்: மெல்ல திறந்தது கதவு
இசை: MS விஸ்வநாதன், இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுரமணியம், S ஜானகி


தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ...

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
வரும் பாதை பார்த்திரு...

தேடும் கண் பார்வை தவிக்க...துடிக்க...

காண வேண்டும் சீக்கிரம்... என் காதல் ஓவியம்
வாராமலே என்னாவதோ... என் ஆசை காவியம்
வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா
கண்ணாளனே நல் வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா...
கனிவாய்...மலரே... உயிர் வாடும் போது ஊடலென்ன
பாவம் அல்லவா...

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்

தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே
காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ
காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே...
நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே
பிரிந்தோம்... இணைவோம்...
இனி நீயும் நானும் வாழ வேண்டும்
வாசல் தேடி வா...

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ
வெறும் மாயமாகுமோ...

தேடும் கண் பார்வை தவிக்க... துடிக்க...

நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா

படம்: வாழ்வே மாயம்
இசை: கங்கை அமரன்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்


நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா
நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள்
நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி
(நீலவான..)

காளிதாசன் பாடினால் மேக தூரமே
தேவிதாசன் பாடுவாள் காதல் கீதமே
இதழ்களில் தேந்துளி ஏந்திடும் பைங்கிளி
இதழ்களில் தேந்துளி ஏந்திடும் பைங்கிளி
நீயில்லையேல் நானில்லையே
கூடல் ஏன் கூடும் நேரம்
(நீலவான..)

நானும் நீயும் நாளைதான் மாலை சூடலாம்
வானம் பூமி யாவுமே வாழ்த்து பாடலாம்
விழியில் ஏன் கோபமோ விரகமோ தாபமோ
விழியில் ஏன் கோபமோ விரகமோ தாபமோ
ஸ்ரீதேவியே என் ஆவியே
எங்கே நீ அங்கே நாந்தான்
(நீலவான..)

ஏன் எனக்கு மயக்கம்

படம்: நான் அவன் இல்லை
இசை: விஜய் ஆண்டனி
பாடியவர்கள்: ஜெய்தேவ், சங்கீதா ராஜேஸ்வரன்


ஏன் எனக்கு மயக்கம்
ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு
ஏன் எனக்கு வியர்வை
ஏன் எனக்கு வரட்டல்
ஏன் இந்த மேல் மூச்சு

ஏ.. இந்த நொடி உனக்குள் விழுந்தேன்
இன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன்
கால் விரலில் வெட்கம் அளந்தேன் மறந்தேன்.. ஹோ
நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்
உன்னை கண்டு கிறுக்காய் அலைந்தேன்
ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்
(ஏன் எனக்கு..)

சம்மதா சேலை போர்வை போர்த்தி கொண்டு நீ தூங்க
சம்மதா வெட்கம் கொன்று ஏக்கம் கூட்டிட
சம்மதமா என்னை உந்தன் கூந்தலுக்குள் குடியேற்ற
சம்மதமா எனக்குள் வந்து கூச்சம் ஊட்டிட
கட்டிக்கொண்டு கைகள் கோர்த்து தூங்க சம்மதம்
உன்னை மட்டும் சாகும் போது தேட சம்மதம்
உள்ளங்கையில் உன்னை தாங்கி வாழ சம்மதம்
உன்னை தோளில் சாய்த்துக் கொண்டு போக சம்மதம்
(ஏன் எனக்கு...)

காதல் என்னும் பூங்கா வனத்தில் பட்டாம் பூச்சி ஆவோமா
பூக்கள் விட்டு பூக்கள் தாவி மூழ்கி போவோமா
காதல் என்னும் கூண்டில் அடந்து ஆயுள் கைதி ஆவோமா
ஆசை குற்றம் நாளும் செய்து சட்டம் மீறம்மா
லட்சம் மீன்கள் தோன்றும் காட்சி உன்னில் காண்கிறேன்
காதல் கொண்ட போதில் தன்னை நேரில் பார்க்கிறேன்
எந்த பெண்ணை காணும் போதும் உன்னை காண்கிறேன்
உண்மை காதல் செய்து உன்னை கொல்லப் போகிறேன்
(ஏன் எனக்கு..)

Wednesday, May 6, 2009

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு

படம்: பாம்பே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: ஹரிஹரன், சித்ரா
வரிகள்: வைரமுத்து



உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு

என் சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர்கொண்ட பெண்மை வாரது போனால் மலைமீது தீக்குளிப்பேன்
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை பெண்ணே அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன்
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
கனவே கனவே உந்தன் கண்ணோடு கறைந்துவிட்டேன்

காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

ஓர் பார்வை பார்த்தே உயிர்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா
ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா
நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பார்க்கவே
என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே
அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு

மனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு மறைந்துவிட்டேன்
மழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்
உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்

Friday, May 1, 2009

ஞாயிறு என்பது கண்ணாக...

படம்: காக்கும் கரங்கள்.
உயிர்: K.V.மகாதேவன்.
உடல்: கவியரசு கண்ணதாசன்.
குரல்: டி.எம்.செளந்தர்ராஜன், பி. சுசீலா.



ஞாயிறு என்பது கண்ணாக
திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவை பழமாக
சேர்ந்தே நடந்தது அழகாக

நேற்றைய பொழுது கண்ணோடு
இன்றைய பொழுது கையோடு
நாளைய பொழுதும் உன்னோடு
நிழலாய் நடப்பேன் பின்னோடு

ஊருக்கு துணையாய் நான் இருக்க
எனக்கொரு துணையை எதிர்பார்த்தேன்
உள்ளத்தின் கோவிலில் விளக்கேற்ற
மைவிழி கிண்ணத்தில் நெய் வார்த்தேன்

(ஞாயிறு என்பது கண்ணாக...)

முன்னொரு பிறவி எடுத்திருந்தேன்
உன்னிடம் மனதை கொடுத்திருந்தேன்
பின்னொரு பிறவி எடுத்து வந்தேன்
பேசிய படியே கொடுக்க வந்தேன்

(ஞாயிறு என்பது கண்ணாக...)

என்னவளே அடி என்னவளே

படம்: காதலன்
இசை: ஏ.ஆர்.ரகுமான்


என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இரண்டையும் மறந்து விட்டேன் - உந்தன்
கால் கொலுசில் அது தொலைந்தென்று உந்தன்
காலடி தேடி வந்தேன்
காதலென்றால் பெரும் அவஸ்தை என்று உன்னை
கண்டதும் கண்டு கொண்டேன்
கழுத்து வரை எந்தன் காதல் வந்து
கண்விழி பிதுங்கி நின்றேன்

என்னவளே அடி என்னவளே……..

வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளுதடி
காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் என்னை பார்ப்பது போல் ஒரு கலக்குமும் தோன்றுதடி
சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி - நான்
வாழ்வதும் வீழ்வதும் போவதும் உந்தன்
வார்த்தையில் உள்ளதடி

என்னவளே அடி என்னவளே…………

கோகிலமே நீ குரல் கொடுத்தால் உன்னை கும்மிட்டு கண்ணடிப்பேன்
கோபுரமே உனைச் சாய்த்துக் கொண்டு கூந்தலில் மீன் பிடிப்பேன்
வெண்நிலவே உன்னை தூங்கவிங்க உந்தன் விரலுக்கு சுடக்குகெடுப்பேன்
வருட வரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்
காதலின் தேவதையாய் காதுக்குள் ஒதிவைப்பேன்
காலடி எழுதிய கோலங்கள் புதிய
கவிதைகள் என்றொரைப்பேன்

என்னவளே அடி என்னவளே…………