Saturday, May 16, 2009

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

பாடல் : சொர்க்கத்தின் வாசப்படி
படம் : உன்னை சொல்லி குற்றமில்லை
இசை : இளையராஜா
குரல் : யேசுதாஸ்,சித்ரா
பாடசாசிரியர் : வாலி


சொர்க்கத்தின் வாசற்படி,
எண்ணக்கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி,
எண்ணக்கனவுகளில்
பெண்ணல்ல நீ எனக்கு,
வண்ணக்களஞ்சியமே
சின்ன மலர்க்கொடியே,
நெஞ்சில் சிந்தும் பனித்துளியே

சொர்க்கத்தின் வாசற்படி,எண்ணக்கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி,எண்ணக்கனவுகளில்

உன்னாலே உண்டாகும் ஞாபகங்கள்,
ஒன்றிரண்டு அல்லவே
ஒன்றுக்குள் ஒன்றான நீரலைகள்
என்றும் இரண்டல்லவே
சிற்றன்னவாசலின் ஓவியமே,
சிந்தைக்குள் ஊரிய காவியமே
எங்கே நீ அங்கேதான் நான் இருப்பேன்,
எப்போதும் நீ ஆட தோள் கொடுப்பேன்
மோகத்தில் நான் படிக்கும் மாணிக்கவாசகமே,
நான் சொல்லும் பாடலெல்லாம்,
நீ தந்த யாசகமே

சொர்க்கத்தின் வாசற்படி,
எண்ணக்கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி,
எண்ணக்கனவுகளில்
பெண்ணல்ல நான் உனக்கு,
வண்ணக்களஞ்சியமே
சிந்தும் பனித்துளியே,
நெஞ்சில் சேரும் இளங்கிளியே

சொர்க்கத்தின் வாசற்படி,
எண்ணக்கனவுகளில்

உன்னாலே நான் கொண்ட காயங்களை
முன்னும் பின்னும் அறிவேன்
கண்ணாலே நீ செய்யும் மாயங்களை
இன்றும் என்றும் அறிவேன்
மின்சாரம் போல் எனை தாக்குகிறாய்,
மஞ்சத்தை போர்க்களம் ஆக்குகிறாய்
கண்ணே உன் கண் என்ன வேலினமோ,
கை தொட்டால்,மெய் தோட்டால்,மீட்டிடுமோ
கோட்டைக்குள் நீ புகுந்து,
வேட்டைகள் ஆடுகிறாய்
நான் இங்கு தோர்த்துவிட்டேன்,
நீ என்னை ஆளுகிறாய்


சொர்க்கத்தின் வாசற்படி,
எண்ணக்கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி,
எண்ணக்கனவுகளில்
பெண்ணல்ல நீ எனக்கு,
வண்ணக்களஞ்சியமே
சிந்தும் பனித்துளியே,
என்னை சேரும் இளங்கிளியே

சொர்க்கத்தின் வாசற்படி,
எண்ணக்கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி.......

No comments:

Post a Comment