Saturday, May 9, 2009

தோகை இள மயில் ஆடி வருகுது

படம் : பயணங்கள் முடிவதில்லை
பாடியவர் : எஸ் பி பாலசுப்ரமணியம்
இயற்றியவர் : வைரமுத்து
இசை : இளையராஜா
வெளியான ஆண்டு : 1980


தோகை இள மயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ

கோலம் போடும் நாணங்கள் காணாத ஜாலம்
இதழ்களிலே பவுர்ணமி வெளிச்சம்
கண்ணில் துள்ளும் தாளஙள் ஆனந்த மேளம்
இமை பறவை சிறகுகள் அசைக்கும்
விழிகளிலே காதல் விழா நடதுகிறாள் சகுந்தலா
அன்னமே இவளிடம் நடை பழகும்
இவள் நடை அசைவினில் சங்கீதம் உண்டாகும்

……தோகை இள மயில்…………..

பூமி எங்கும் பூந்தோட்டம் நான் காண வேண்டும்
புது தென்றலும் பூக்களில் வசிக்கும்
ஆகாய மேகஙள் நீரூற்ற வேண்டும்
அந்த மழையில் மலர்களும் குளிக்கும்
அருவிகளோ ராகம் தரும் அதில் நனைந்தால் ராகம் வரும்
தேவதை விழியிலே அமுத அலை
கனவுகள் வளர்ந்திடும் கள்ளூரும் உன் பார்வை

……..தோகை இள மயில்………..

No comments:

Post a Comment