Saturday, May 9, 2009

இந்த மான் உந்தன் சொந்த மான்

படம்: கரகாட்டக்காரன்
இசை: இளையராஜா
குரல் : இளையராஜா & சித்ரா
வரிகள்: கங்கை அமரன்


இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்துதான் சிந்து பாடும்
இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்துதான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே என்னுயிரே
இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்த மான்
...

வேல்விழி போடும் தூண்டிலே.. நான் விழலானேன் தோளிலே
நூலிடை தேயும் நோயிலே.. நான் வரம் கேட்கும் கோயிலே
அன்னமே.. ஆஆஆஆஆ.. ஆஆஆஆஆ...
ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆ..
அன்னமே எந்தன் சொர்ணமே
உந்தன் எண்ணமே வானவில் வண்ணமே
கன்னமே மதுக்கிண்ணமே
அதில் பொன்மணி வைரங்கள் மின்னுமே
எண்ணமே தொல்லை பண்ணுமே
பெண்ணென்னும் கங்கைக்குள் பேரின்பமே

இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்துதான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவனே
என்னுயிரே
...

பொன்மணி மேகலை ஆடுதே.. உன் விழிதான் இடம் தேடுதே
பெண்ணுடல் பார்த்ததும் நாணுதே.. இன்பத்தில் வேதனை ஆனதே
எண்ணத்தான்.. ஆஆஆஆஆ.. ஆஆஆஆஆ...
ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆ..
எண்ணத்தான் உன்னை எண்ணித்தான்
உடல் மின்னத்தான் வேதனை தின்னத்தான்
சொல்லித்தான் நெஞ்சைக் கிள்ளித்தான்
என்னை சொர்க்கத்தில் தேவனும் சோதித்தான்
ஆ: மோகம்தான் சிந்தும் தேகம்தான்
தாகத்தில் நான் நிற்க ஆனந்தம்தான்

இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்துதான்
சிந்து பாடும்.. இந்த மான்
எந்தன் சொந்த மான்
பக்கம் வந்துதான்
சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
கண்மணியே.. சந்திக்க வேண்டும் தேவியே
என்னவனே

No comments:

Post a Comment