Friday, May 29, 2009

ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

படம்: அரங்கேற்ற வேளை
பாடல்: ஆகாய வெண்ணிலாவே!


ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட
உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட
ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ


தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் உண்டு
பூவாரம் சூடிக்கொண்டு தலை வாசல் வந்ததின்று

தென்பாண்டி மன்னன் என்று தினம் மேனி வண்ணம் கண்டு
மாடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று

இளநேரம் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்
கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்

கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட
நடு சாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட


ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்
ஆதாதி தேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்

வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு காணம் கிளி பேச்சை கூட்டக் கூடும்

அடியாளின் ஜீவன் ஏறி அதிகாரம் செய்வதென்ன?
அலங்கார தேவ தேவி அவதாரம் செய்வதென்ன

இசை வீணை வாடுதோ இதமான கைகளில் மீட்ட
சுதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட

ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட
உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட
ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

1 comment: