Saturday, October 10, 2009

பூவாடை காற்று வந்து

படம் : கோபுரங்கள் சாய்வதில்லை
குரல் : ஜெயசந்தர், ஜானகி
இசை : இளையராஜா


பூவாடை காற்று வந்து ஆடை தீண்டுமே
முந்தானை இங்கே குடையாக மாறுமே
சாரல் பட்டதால் பூவெடிக்குமே
ஈர வண்டுகள் தேன் குடிக்குமே ஆ.ஆ.ஆ
பூவாடை காற்று ல ல ல ல ல
வந்து ஆடை தீண்டுமே ல ல ல ல
முந்தானை இங்கே ல ல ல ல
குடையாக மாறுமே ல ல ல ல

பாதை தடுமாறும் இது போதை மழையாகும்
முந்தானை வாசம் ஏதோ சுகம்...
காணாத பூவின் ஜாதி நனைந்ததே தேகம் பாதி
தள்ளாடும் காதல் ஜோதி என்ன சேதி
இது தானே மோகம் பபப்பா
ஒரு பூவின் தாகம் பபப்பா
குடையோடு நனையாதோ பூங்காவனம்

பூவாடை காற்று ...

ஏங்கும் இளமாலை விரல் தீண்டும் சுக வேளை
காணாததன்றோ ஆண் வாசனை ...
அம்பிகை தங்கை என்று கிண்டுதே ஆசை வண்டு
துள்ளுதே ரோஜா செண்டு சூடு என்று
இரு கண்ணின் ஓரம் பபாப்பா
நிறம் மாறும் நேரம் பபாப்பா
மார்பில் விழும் மாலைகளின் ஆலிங்கனம்

பூவாடை காற்று ....

No comments:

Post a Comment