Saturday, October 10, 2009

குயிலே குயிலே பூங்குயிலே

படம் : ஆண் பாவம்
குரல் : மலேசியா வாசுதேவன், சித்ரா,
இசை : இளையராஜா


குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே மாமயிலே ...
ஒரு பூஞ்சோலையே ஒனக்காக தான்
பூத்தாடுதே வா வா

குயிலே குயிலே ....

தொட்டாலே நீ சினுங்கும் அழகு ஒன்ன தொட்டாலே சிலிர்குதடி
பட்டாலே பத்திக்கொள்ளும் காதல் இது ஒட்டாதே தள்ளி நில்லு
சிட்டுகொரு பட்டுத் துணி கட்டித் தரவா
மொட்டுகென முத்துச் சரம் கொட்டித் தரவா
ஒட்டிகிற கட்டிகிற சிட்டுக் குருவி
கட்டுக்கத விட்டு ஒரு பாட்டா படிக்கும்
நெஜமா நெஜமா நான் தவிச்சேன்
ஒனையே நெனச்சி உயிர் வளர்த்தேன்
இது ஆணுக்கும் பெண்ணுக்கும் என்னாளும் உள்ள கதை

குயிலே குயிலே....

ராசாதி ராசனத் தான் கட்டிக்கொள்ள ராசாத்தி ஆசப் பட்டா
ராசாத்தி என்ன செய்வா அவளுக்குன்னு ராசாவா நான் பொறந்தா
அன்னைக்கொரு எழுத்த எனக்கெழுதிபுட்டான்
இன்னைக்கத அழிச்சா அவன் எழுதப்போறான்
பெண்ணே பழி அவன் மேல சொல்லாதேடி
ஆண்பாவம் பொல்லாதது கொல்லாதடி
தவறொ சரியோ விதி இது தான்
சரி தான் சரி தான் வழக்கெதுக்கு
இது ஆணுக்கும் பெண்ணுக்கும் என்னாளும் உள்ள கதை

குயிலே குயிலே ....


No comments:

Post a Comment