Saturday, October 3, 2009

பாட்டு வரும் பாட்டு வரும்

படம் : நான் ஆனையிட்டால்


பாட்டு வரும் பாட்டு வரும்
உன்னை பார்த்து கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதை பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
அதை கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும்

பாட்டு வரும் பாட்டு வரும் ...

இதயம் என்றொரு ஏடெடுத்தேன்
அதில் எத்தனையோ நான் எழுதிவைத்தேன்...
எழுதியதெல்லாம் உன் புகழ் பாடும்
எனக்கது போதும் வேறென்ன வேண்டும் -

பாட்டு வரும் பாட்டு வரும் ...

காதல் என்றொரு சிலை வடித்தேன்
அதை கண்கள் இரண்டில் சிறை எடுத்தேன்...
சிறை எடுத்தாலும் காவலன் நீயே
காவலன் வாழ்வில் காவியம் நானே...

பாட்டு வரும் பாட்டு வரும் ...

மனம் என்னும் ஓடையில் நீந்தி வந்தேன்
அதில் மலர் முகம் ஒன்றை ஏந்தி வந்தேன்....
ஏந்திய கையில் இருப்பவள் நானே
இறைவனை நேறில் வரவழைப்பேனே ...

பாட்டு வரும் பாட்டு வரும் ...

No comments:

Post a Comment