Saturday, October 17, 2009

நெஞ்சத்திலே நீ நேற்று

படம் : சாந்தி
குரல் : பி.சுசீலா
இசை : எம்.எஸ்.வி
வரிகள்: கண்ணதாசன்


நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்....
நினைவு தராமல் நீயிருந்தால்
கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்

நெஞ்சத்திலே ....

நூலிடை மீதொரு மேகலையாட
மாலைக்கனிகள் ஆசையில் வாட ...
ஏலப் பூங்குழல் இன்னிசை பாட
எண்ணம் யாவும் எங்கும் ஓட
காலையில் உறங்கி மாலையில் எழுந்தால்
கண்கள் இரண்டில் நிம்மதி ஏது
நிம்மதி ஏது...நிம்மதி ஏது...

நெஞ்சத்திலே....

காவிரி ஆறென நீர் விளையாட
கன்னி மலர்கள் தேன்மழையாக ...
பாதி விழிகள் காதலில் மூட
பாலில் விழுந்த பழம் போலாட
நீ தரவேண்டும் நான் பெறவேண்டும்
நிலவில் ஆடும் நிம்மதி வேண்டும்
நிம்மதி வேண்டும்...நிம்மதி வேண்டும்...

நெஞ்சத்திலே ....

No comments:

Post a Comment