Saturday, October 17, 2009

செந்தூர் முருகன் கோவிலிலே

படம் : சாந்தி
இசை : எம்.எஸ்.வி
வரிகள்: கண்ணதாசன்

செந்தூர் முருகன் கோவிலிலே - ஒரு
சேதியை நான் கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்

செந்தூர்....

என்னிரு கைகள் தூக்கியபோது
பெண்பார்க்க வந்தானம்மா...
பன்னிரு கையில் வாரி யணைத்துப்
பண்பாட வந்தானம்மா

செந்தூர்....

கொஞ்சும் குமரனின் அழகிய மடியில்
கொண்டாட வரலாமா ...
குங்குமம் சிவந்த கோதை இதழில்
ஒன்றேனும் தரலாமா

செந்தூர்....


No comments:

Post a Comment