Saturday, August 15, 2009

இரு விழியின் வழியே நீயா

படம் : சிவா
இசை : இளையராஜா



இரு விழியின் வழியே நீயா வந்து போனது
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது
இரு பார்வைகள் பரிமாறிடும் மன ஆசைகள்
அணை மீறிடும் அணை மீறும் போது காவல் ஏது

விழியின்....

தொட்டில் இடும் இரு தேம்மாங்கனி
என் தோளில் ஆட வேண்டுமே
கட்டில் இசும் உன் காமன் கனி
மலர் மாலை சூட வேண்டுமே
கொஞ்சம் பொறு கொஞ்சம் பொறு
தேதி ஒன்று பார்க்கின்றேன்
கொஞ்சும் கிளி மஞ்சம் இடும்
தேதி சொல்ல போகிறேன்
கார் கால மேகம் வரும்
கல்யாண ராகம் வரும்
பாடட்டும் நாதஸ்வரம்
பார்க்கட்டும் நாளும் சுகம்
விடிகாலையும் இளமாலையும்
இடை வேளையின்றி இன்ப தரிசனம்

விழியின்...

உன் மேனியும் நிலக்கண்ணாடியும்
ரசம் பூச என்ன காரணம்
ஒவ்வொன்றிலும் உனை நீ காணலாம்
இதை கேட்பதென்ன நாடகம்
எங்கே எங்கே ஒரே தரம்
என்னை உன்னில் பார்க்கிறேன்
இதோ இதோ ஒரே சுகம்
நானும் இன்று பார்க்கிறேன்
தென்பாண்டி முத்துக்களா
நீ சிந்தும் முத்தங்களா
நோகாமல் கொஞ்சம் கொடு
உன் மார்பில் மஞ்சம் இடு
இரு தோள்களில் ஒரு வானவில்
அது பூமி தேடி வந்த அதிசயம்

விழியின்...

No comments:

Post a Comment