Saturday, August 15, 2009

அடி வான்மதி என் பார்வதி

படம் : சிவா
குரல் : எஸ்.பி.பாலா, ஜானகி
இசை : இளையராஜா


அடி வான்மதி...என் பார்வதி...
காதலி...கண் பாரடி...

அடி வான்மதி...என் பார்வதி...
காதலி...கண் பாரடி...
தேடி வந்த தேவதாசை காண ஓடிவா
அடி பார்வதி...என் பார்வதி...
பாரு பாரு என்றேன் பார்த்தால் ஆகாதா
பாடும் பாடல் அங்கே கேட்காதா

அடி வான்மதி...என் பார்வதி...

சின்ன ரோஜா இதழ்...
அது கன்னம் நான் என்றது...
பாடும் புல்லாங்குழல்...
உன் பாஷை நான் என்று கூறும்...
கூந்தல் அல்ல...தொங்கும் தோட்டம்...
தாளில் சாய்ந்தால்...ஊஞ்சல் ஆட்டும்
தேன் தர மீண்டும்...நீவர வேண்டும்..
கண்வாசல் சார்த்தாது வா...ஆஆஆ...

ஒரு வான்மதி...உன் பார்வதி...
காதலி...நீ காதலி... தேவன் எந்தன் தேவதாசை
காண ஏங்கினேன் ,என் தேவதாஸ்...என் தேவதாஸ்..
பாரு பாரு என்னும் பாடல் கேட்டேனே...
பாரு நானும் உன்னை பார்த்தேனே...

ஒரு வான்மதி...உன் பார்வதி...

கோடை காலங்களில்... குளிர் காற்று நீயாகிறாய்...
வாடை நேரங்களில்... ஒரு போர்வை நீயாக வந்தாய்...
கண்கள் நாலும்...பேசும் நேரம்...
நானும் நீயும் ஊமை ஆனோம்
மைவிழி ஆசை...கைவளையோசை...
என்னென்று நான் சொல்லவா...ஆஆஆ...

அடி வான்மதி...என் பார்வதி...
காதலி...கண் பாரடி...தேடி வந்த தேவதாசை காண ஓடிவா
என் தேவதாஸ்...என் தேவதாஸ்..
பாரு பாரு என்னும் பாடல் கேட்டேனே...
ஹஹ்ஹ.. ஹா..பாரு நானும் உன்னை பார்த்தேனே...

அடி வான்மதி...என் பார்வதி...
தேவதாஸ்...என் தேவதாஸ்..

1 comment: