Saturday, March 28, 2009

கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ

Film : பாடும் பறவைகள்
Song : கீரவாணி
Singer : S.P.Balasubramaniyam, S.Janaki
Music : Illayaraja

கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ
இதயமே உருகுதே
அடி ஏனடி சோதனை தினம் வாலிப வேதனை
தனிமயில் என் கதி என்னடி சங்கதி சொல்லடி
வா நீ கீரவாணி
இரவிலே கனவிலே பாட வா நீ
இதயமே உருகுதே

நீ பார்த்ததால் தானடி சூடானது மார்கழி
நீ சொன்னதால் தானடி பூ பூத்தது பூங்கொடி
தவம் புரியாமலே ஒரு வாரம் கேட்கிறாய்
இவள் மடி மீதிலே ஒரு இடம் கேட்கிறாய்
வருவாய் பெறுவாய் மெதுவாய்
தலைவனை நினைந்ததும் தலை ஆணை நனைந்ததே
அதற்கொரு விடை தருவாய்

(கீரவாணி)

புலி வேட்டைக்கு வந்தவன் குயில் வேட்டை தான் ஆடினேன்
புயல் போலவே வந்தவன் பூண் தென்றலாய் மாறினேன்
இந்த கணம் எங்கிலும் ஒரு ஸ்வரம் தேடினேன்
இங்கு உனை பார்த்ததும் அதை தினம் பாடினேன்
மனதில் மலராய் மலர்ந்தேன்
வளருக இவளது உறவுகள் என தினம் கனவுகள் பல வளர்த்தேன்

(கீரவாணி)




No comments:

Post a Comment