Wednesday, September 16, 2009

உயிரே உயிரே அழைத்ததென்ன

படம்: உயிரிலே கலந்தது
இசை: தேவா
பாடியவர்கள்: சுஜாதா, ஹரிஹரன்
வரிகள்: வைரமுத்து


உயிரே உயிரே அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி வந்தேன்
மறைந்ததென்ன
உயிரே...

உன் கீதம் எந்தன் காதில் விழுமா?
உன் வானம் எந்தன் பக்கம் வருமா?
கங்கை எந்தன் வாசல் வருமா?
இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா
உயிரே....

நீ தோன்றினாய் அடி வானமாய்
நான் வந்ததும் தொலைவானாய்
கண் மூடினேன் மெய் தீண்டினாய்
கை நீட்டினேன் கனவாகினாய்
மலைச்சாலையில் குமிலாகினாய்
விரல் தீண்டினேன் உடந்தோடினாய்
என் தூரத்து விண்மீனே கை ஓரத்தில் வருவாயா?
என்னை ஒரு முறை தொடுவாயா ஒளியே ஏ ஏ ஏ
உயிரே....

காற்றெங்கிலும் உன் கீர்த்தனை
கண்ணீரிலே ஆராதனை
என் தோட்டத்தில் உன் வாசனை
என் ஜீவனில் உன் வேதனை
நான் தேடினேன் என் கண்ணனை
துயர் சூழ்ந்ததே என் கண்களை
நான் வேறெங்கும்யும் மறையவில்லை
என் வேரும் அழிவதில்லை
உன் வானம் முடிவதில்லை
உடலே..

உயிரே....

No comments:

Post a Comment