Saturday, September 5, 2009

இந்த புன்னகை என்ன விலை

படம் : தெய்வத்தாய்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்


இந்த புன்னகை என்ன விலை
என் இதயம் சொன்ன விலை
இவள் கன்னங்கள் என்ன விலை
இந்த கைகள் தந்த விலை
இந்த புன்னகை என்ன விலை
என் இதயம் சொன்ன விலை

எழுதிய கவிதைகள் ஆயிரமோ
எண்ணங்கள் ஊஞ்சலில் போய்வருமோ....
அழகிய பெண்களின் பழக்கம் உண்டோ
பாட்டுகள் பாடும் வழக்கமுண்டோ

இந்த புன்னகை...

எந்த பாட்டுக்கும் தாளங்கள் வேண்டும்
எந்த பாவைக்கும் காவல்கள் வேண்டும் ....
எந்த ஆசைக்கும் உருவங்கள் வேண்டும்
எந்த பார்வைக்கும் பருவங்கள் வேண்டும்
எந்த நேரமும் நீ இங்கே வேண்டும்
அழகே அருகே வருவேனே....

இந்த புன்னகை...

கண்ணில் பட்டதில் பாதி சுகம்
கையில் தொட்டதில் மீதி சுகம்....
இரவுக்கும் நிலவுக்கும் வேலை வைத்தாய்
காலத்தின் காதலை வாழ வைத்தாய்
இவள் மூடிய பார்வையில் மயக்கம்
இதல் மூடிய வார்த்தையில் மௌனம்....
இந்த ஆரம்ப பாடங்கள் படித்தேன்
இதை உன்னிடமெ தான் படித்தேன்
எந்த நேரமும் நீ இங்கு வேண்டும்
அழகே அருகே வருவேனே

இந்த புன்னகை.....

No comments:

Post a Comment