Saturday, September 5, 2009

வண்ணக்கிளி சொன்ன

படம் : தெய்வத்தாய்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
குரல் : டி.எம்.எஸ் & P.சுசீலா
பாடல் : கவிஞர் வாலி


வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ?
வஞ்சிமகள் வாய்திறந்து சொன்ன மொழியோ?....

புள்ளிமயில் புன்னகையில் என்ன மயக்கம்?
அள்ளி அள்ளிக் கொண்டு செல்ல என்ன தயக்கம்? ....

வண்ணக்கிளி ....

போட்டு வைத்த வட்ட முகம் என்ன முகமோ?-அதைத்
தொட்டு விடத் துடிப்பதிலே என்ன சுகமோ? ....
கண்ணிமான மாளிகையில் காவல் நிற்கவா?- அங்கே
காவல் நின்ற மன்னவனின் கைபிடிக்க வா!

வண்ணக்கிளி....

அத்திப் பழக் கன்னத்திலே கிள்ளிவிடவா?- இந்த
ஊரையெல்லாம் நானழைத்து சொல்லி விடவா? ....
அல்லிவிழி துள்ளி விழ கோபம் என்னவோ?- இங்கே
அஞ்சி அஞ்சிக் கொஞ்சுவதில் லாபம் என்னவோ?

வண்ணக்கிளி....

No comments:

Post a Comment