Saturday, September 5, 2009

இதுவரை நீங்கள் பார்த்த

படம் : பணக்கார குடும்பம்.

இதுவரை நீங்கள் பார்த்த பார்வை
இதற்காக தானா
இப்படி என்று சொல்லி இருந்தால்
தனியே வருவேனா .....

சொல்லில் விளங்காத எழுத்தில் அடங்காத
சுகத்தை அறிந்தாயோ
தூக்கம் வளராமல் பாக்கி தெரியாமல்
ஏக்கம் அடைந்தாயோ
ஹோய்.....
அதுவரை வந்தால் போதும் போதும்
அடுத்தது என்னம்மா
ஆரத்தி மேலம் மணவரை கோலம்
வருமா சொல்லம்மா

கைதானா இது நெருப்பா
கனிந்துவிட்டால் என்ற நினைப்பா
கைதானா ...
அனுபவம் இல்லாத மனது
கொஞ்சம் அமைதி அமைதி அமைதி

நில்லாதே அந்த நிலவு
வெறும் நினைவில் வருமோ உறவு
நில்லாதே....
சில்லென்ற மனதின் துடிப்பு
கொஞ்சம் அருகே அருகே அருகே

அதுவரை வந்தால்.....

அம்மம்மா இது கொடுமை
நான் அறியாது இந்த புதுமை
அம்மம்மா....
பேச முடியாத பெருமை
இந்த இனிமை இனிமை இனிமை

எங்கெங்கோ நான் பறந்தேன்
ஒரு இளமை விருந்தில் இருந்தேன்
எங்கெங்கோ ...
கண்களை மீண்டும் திறந்தேன்
சுகம் கண்டேன் கண்டேன் கண்டேன்.

இதுவரை நீங்கள்....

No comments:

Post a Comment