படம் : தர்மதுரை
சந்தைக்கு வந்த கிளி
சாடை சொல்லி பேசுதடி....
முத்தம்மா முத்தம்மா
பக்கம் வர வெட்கமா....
குத்தாலத்து மானே
கொத்து பூ வாடிடும் தேனே....
சந்தைக்கு வந்த கிளி ....
கானாத காட்சியெல்லாம்
கண்டேனே உன்னழகில்
பூப்போல கோலமெல்லாம்
போட்டாயே உன்விழியில்
மானா மதுரையிலே
மல்லிகப்பூ வாங்கி வந்து
மைபோட்டு மயக்குனியே
கை தேர்ந்த மச்சானே
தாமரையும் பூத்திருச்சி
தக்காளி பழுத்திருச்சி
தங்கமே உன் மனசு
இன்னும் பழுக்கலையே
இப்பவே சொந்தம் கொண்டு நீ
கையில் அள்ளிக்கொள்ளு மாமா
சந்தைக்கு வந்த மச்சான்
சாடை சொல்லி பேசுவதேன்....
சொல்லவா சொல்லவா
ஒன்னு நான் சொல்லவா...
கல்யாணத்த பேசி நீ
கட்ட வேனும் தாலி...
ஆளான நாள் முதலா
உன்னதான் நான் நினைச்சேன்
நூலாகத்தான் எலச்சி
நோயில் தினம் வாடி நின்னேன்
பூ முடிக்கும் கூந்தலிலே
என் மனச நீ முடிக்க
நீ முடிச்ச முடிப்பினிலே
என் உசிரு தினம் துடிக்க
பூவில் நல்ல தேனிருக்கு
பொன்வண்டு காத்திருக்கு
இன்னும் என்ன தாமதமே
மாமனுக்கு சம்மதமோ
இப்பவே சொந்தங்கொள்ளவே
என்னருகில் வா..மா..
சந்தைக்கு வந்த கிளி....
No comments:
Post a Comment