Saturday, July 25, 2009

ஊரெல்லாம் உன் பாட்டு

படம் - ஊரெல்லாம் உன் பாட்டு

ஊரெல்லாம் உன் பாட்டு தான் உள்ளத்தை மீட்டுது
நாளெல்லாம் உன் பார்வை தான் இன்பத்தை கூட்டுது
நீயல்லால் தெய்வம் வேறெது..
நீ எனைச் சேரும் நாளெது.. ஓஹோ..

உன் பெயர் உச்சரிக்கும் -
உள்ளம் நித்தமும் தத்தளிக்கும் - இங்கு
நீயில்லாது வாழ்விலேது வேனிற்காலம் தான்
என் மனம் உன்வசமே - கண்ணில்
என்றுமுன் சொப்பனமே - விழி
காணும் காட்சி யாவும் உந்தன் வண்ணக்கோலம் தான்
ஆலம் விழுதுகள் போலே
ஆடும் நினைவுகள் கோடி
ஆடும் நினைவுகள் நாளும்
வாடும் உனதருள் தேடி
இந்தப்பிறப்பிலும் எந்தப்பிறப்பிலும்
எந்தன் உயிர் உனை சேரும்

ஊரெல்லாம் உன்.....

சென்றது கண்ணுறக்கம் - நெஞ்சில்
நின்றது உன் மயக்கம் -இங்கு
ஓய்வதேது தேய்வதேது உந்தன் ஞாபகம்
உன்னிடம் சொல்வதற்கு - என்னம்
ஒன்றல்ல நூறிருக்கு - அதை
நீயும் கேட்க நானும் சொல்ல ஏது வாசகம்
பாத சுவடுகள் போகும்
பதை அறிந்திங்கு நானும்
கூட வருகின்ற போதும்
கூட மறுப்பதோ நீயும்
உள்ளக்கதவினை மெல்லத்திறந்திங்கு
நெஞ்சில் இடம் தர வேண்டும்

ஊரெல்லாம் உன்.....


No comments:

Post a Comment