Saturday, July 11, 2009

சாதிமல்லி பூச்சரமே

படம் : அழகன்
குரல் : எஸ்.பி.பாலா
இசை : மரகதமணி


சாதிமல்லி பூச்சரமே
சங்கத்தமிழ் பாச்சரமே
ஆசையின்னா ஆசையடி
அவ்வளவு ஆசையடி
என்னன்னு முன்னேவந்து
கன்னே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம்
இப்போது மறப்போம்
கன்னித்தமிழ் தொண்டாற்று
அதை முன்னேற்று
பின் கட்டிலில் தாலாட்டு
சாதிமல்லி பூச்சரமே ...

எனது வீடு எனது வாழ்வு
என்று வாழ்வது வாழ்க்கையா
இருக்கும் நாலு சுவருக்குள்ளே
வாழ நீ ஒரு கைதியா
தேசம் வேறல்ல தாயும் வேறல்ல
ஒன்றுதான்
தாயைக் காப்பதும் நாட்டைக் காப்பதும்
ஒன்றுதான்
கடுகுபோல் உன்மனம் இருக்கக்கூடாது
கடலைப்போல் விரிந்ததாய் இருக்கட்டும்
உன்னைப் போல் எல்லோரும் என எண்ணோணும்
அதில் இன்பத்தைத் தேடோணும்
சாதிமல்லி பூச்சரமே......

உலகமெல்லாம் உண்ணும்போது
நாமும் சாப்பிட எண்ணுவோம்
உலகமெல்லாம் சிரிக்கும்போது
நாமும் புன்னகை சிந்துவோம்
யாதும் ஊரென யாரு
சொன்னது சொல்லடி
பாடும் நம் தமிழ்ப் பாட்டன்
சொன்னது கண்மணி
படிக்கத்தான் பாடலா நெனச்சுப் பாத்தோமா
படிச்சத நெனச்சு நாம் நடக்கத்தான்
கேட்டுக்கோ ராசாத்தி தமிழ்நாடாச்சு
இந்த நாட்டுக்கு நாமாச்சு

சாதிமல்லி பூச்சரமே...

No comments:

Post a Comment