Saturday, April 25, 2009

வாடிக்கை மறந்ததும் ஏனோ

வாடிக்கை மறந்ததும் ஏனோ? - என்னை
வாட்டிட ஆசை தானோ - பல
கோடி மலரழகை மூடி வைத்து மனதை
கொள்ளை யடிப்பதும் ஏனோ? (வாடிக்கை)

வாடிக்கை மறந்திடுவேனோ? - என்னை
வாட்டிடும் கேள்விகள் ஏனோ? - புது
மங்கை எந்தன் மனதில்,பொங்கிவரும் நினைவில்
மாற்றம் சொல்வதும் ஏனோ? (வாடிக்கை)

அந்தி நேரத்தின் ஆனந்தக் காற்றும்
அன்பு மணக்கும் தேன்சுவைப் பாட்டும்
அமுத விருந்தும் மறந்து போனால்
உலகம் வாழ்வதும் ஏது? - பல
உயிர்கள் மகிழ்வதும் ஏது? - நெஞ்சில்
இனித்திடும் உறவை இன்பமெனும் உணவைத்
தனித்துப் பெறமுடியாது

அந்தி நேரம் போனதால்
ஆசை மறந்தே போகுமா?
அன்புக் கரங்கள் சேரும்போது
வம்பு வார்த்தைகள் ஏனோ?
இன்ப வேகம் தானோ..? (வாடிக்கை)

காந்தமோ இது கண்ணொளிதானோ?
காதல் நதியில் நீந்திடும் மீனோ?
கருத்தை யறிந்தும் நாணம் ஏனோ..?

பொறுமை இழந்திடலாமோ? - பெரும்
புரட்சியில் இறங்கிடலாமோ? - நான்
கருங்கல்லுச் சிலையோ காதலெனக் கில்லையோ
வரம்பு மீறுதல் முறையோ..?

சைக்கிளும் ஓட மண் மேலே - இரு
சக்கரம் சுழல்வது போலே - அணை
தாண்டிவரும் சுகமும்,தூண்டிவிடும் முகமும்
சேர்ந்ததே உறவாலே...


No comments:

Post a Comment