Friday, April 3, 2009

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே.

படம்: ஜெயம் கொண்டான்
பாடல்: நான் வரைந்து வைத்த சூரியன்
பாடியவர்கள்: ஹரிஹரன், மதுஸ்ரீ
இசை: வித்யாசாகர்


நான் வரைந்து வைத்த சூரியன்
ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி
மலர்கின்றதே
நான் துரத்தி நின்ற காக்கைகள்
மயில்கள் ஆனதே
என் தலை நனைத்த மழைத்துளி
அமுதம் ஆனதே
நான் இழுத்துவிட்ட மூச்சிலே
இசை கசிந்ததே

நான் வரைந்து வைத்த சூரியன்
ஒளிருகின்றதே
ஒளிருகின்றதே……..
நான் நடந்து சென்ற மணல் வெளி
மலர்கின்றதே
மலர்கின்றதே………..

ஜன்னல் கம்பி
உந்தன் கைகள் பட்டுபட்டு
வெள்ளி கம்பி என்று ஆகியதே

கம்பன் சட்டை
உந்தன் கண்கள் தொட்டுதொட்டு
தங்கச் சிற்பம் என்று மாறியதே

ஜன்னல் கம்பி
உந்தன் கைகள் பட்டுபட்டு
வெள்ளி கம்பி என்று ஆகியதே………

கம்பன் சட்டை
உந்தன் கண்கள் தொட்டுதொட்டு
தங்கச் சிற்பம் என்று மாறியதே…..

தூக்கும் புன்னகையாலே
என் தோள்கள் இறக்கைகள் ஆக…

நாக்கு உன் பெயர் கூற
என் நாள்கள் சர்க்கரை ஆக…

தலைகீழ் தடுமாற்றம்
தந்தாயே என் நீயே
என் கால்களில்……

நான் வரைந்து வைத்த சூரியன்
ஒளிருகின்றதே

நான் நடந்து சென்ற மணல் வெளி
மலர்கின்றதே

ஹா…ஹா…. அஹா….ஹா….அ….அ….அ….
ஹா…ஹா…. அஹா….ஹா….அ….அ….அ….

பள்ளி செல்லவில்லை
பாடம் கேட்கவில்லை
அள்ளிக்கொள்ள மட்டும் நான் படிப்பேன்

நல்ல முல்லை இல்லை
நாணல் கயிறு இல்லை
உன்னை மட்டும் நான் தொடுப்பேன்

பள்ளி செல்லவில்லை
பாடம் கேட்கவில்லை
அள்ளிக்கொள்ள மட்டும் நான் படிப்பேன்….

நல்ல முல்லை இல்லை
நாணல் கயிறு இல்லை
உன்னை மட்டும் நான் தொடுப்பேன்….

ஊஞ்சல் கயிறு இல்லாமல்
என் ஊமை மனது ஆடும்

தூங்க இடம் இல்லாமல்
என் காதல் கனவை நாடும்

நொடியும் விளகாமல்
கொஞ்சம் கொஞ்சம் தங்கும் நெஞ்சில்

நான் வரைந்து வைத்த சூரியன்
ஒளிருகின்றதே

நான் நடந்து சென்ற மணல் வெளி
மலர்கின்றதே

நான் துரத்தி நின்ற காக்கைகள்
மயில்கள் ஆனதே

என் தலை நனைத்த மழைத்துளி
அமுதம் ஆனதே

நான் இழுத்துவிட்ட மூச்சிலே
இசை கசிந்ததே

நான் வரைந்து வைத்த சூரியன்
ஒளிருகின்றதே

நான் நடந்து சென்ற மணல் வெளி
மலர்கின்றதே………..

No comments:

Post a Comment