Friday, April 3, 2009

தேன் தேன் தேன் உன்னை தேடி அலைந்தேன்!

படம்: குருவி
பாடல் : தேன் தேன் தேன்
இசை: வித்யாசாகர்
இயக்குநர் : தரணி



தேன் தேன் தேன்
உன்னை தேடி அலைந்தேன்!
உயிர் தீயாய் அலைந்தேன்!
சிவந்தேன்!


தேன் தேன் தேன்
என்னை நானும் மறந்தேன்!
உன்னை காண தயந்தேன்!
கரைந்தேன்!


என்னவோ சொல்ல துடித்தேன்!
இனிதே செய்ய துடித்தேன்!
உன்னோட சேரத் தான் நானும் அலைந்தேன்!

தேன் தேன் தேன்
உன்னை தேடி அலைந்தேன்!
உயிர் தீயாய் அலைந்தேன்!
சிவந்தேன்!


வாழவரும் கையை ரசித்தேன்!
அழவரும் கண்ணை ரசித்தேன்!
அடங்காமல் தாவும் உந்தன் அன்பை ரசித்தேன்!
குத்தவரும் பொய்யை ரசித்தேன்!
முட்டவரும் மெய்யை ரசித்தேன்!
உறங்காமல் இன்னும் உந்தன் உள்ளம் ரசித்தேன்!


நீ சொல்லும் சொல்லை ரசித்தேன்!
ஏதும் சொல்லும் அதையும் ரசித்தேன்!
நீ செய்யும் யாவும் ரசித்தேன்!
இன்னும் செய்யாததையும் ரசித்தேன்!
உன்னால் தானே நானும் என்னை ரசித்தேன்!

தேன் தேன் தேன்
உன்னை தேடி அலைந்தேன்!
உயிர் தீயாய் அலைந்தேன்!
சிவந்தேன்!

ஆ அ அ அ ஹ ஹ ஹா


சேலையில் நிலவை அறிந்தேன்!
காலில் சிறகை அறிந்தேன்!
கனவிலே காதல் என்று மிரள அறிந்தேன்!
திருடனாய் உன்னை அறிந்தேன்!
திருடினாய் என்னை அறிந்தேன்!
என் உயிர் திருடத் தானே ஆசை அறிந்தேன்!


என் பக்கம் உன்னில் அறிந்தேன்!
பல சிக்கல் உன்னால் அறிந்தேன்!
உன் தென்றல் உன்னால் அறிந்தேன்!
அதில் தோன்றும் பிம்பமாய் அறிந்தேன்!
நீ நடமாடும் திராட்சை தோட்டம் என்றில் அறிந்தேன்!


தேன் தேன் தேன்
உன்னை தேடி அலைந்தேன்!
உயிர் தீயாய் அலைந்தேன்!
சிவந்தேன்!


ஏய்! தேன் தேன் தேன்
என்னை நானும் மறந்தேன்!
உன்னை காண தயந்தேன்!
கரைந்தேன்!

No comments:

Post a Comment