Saturday, April 18, 2009

முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்

படம் : நெஞ்சிருக்கும் வரை
குரல் : டி. எம். சௌந்தர ராஜன் - பீ. சுசீலா


முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை
தந்துவிட்டேன் என்னை

படித்த பாடம் என்ன உன் கண்கள் பார்க்கும் பார்வை என்ன
பாலில் ஊரிய ஜாதிப் பூவை சூடத் துடிப்பதென்ன

முத்துக்களே பெண்கள் தித்திப்பதே கன்னம்
சந்தித்த வேலையில் சிந்திக்கவே இல்லை
தந்துவிட்டேன் என்னை

கன்னிப் பெண்ணை மெல்ல மெல்ல தென்றல் தாலாட்ட
கடலின் அலைகள் ஓடிவந்து காலை நீராட்ட
எழுந்த இன்பம் என்ன என் எண்ணம் ஏங்கும் ஏக்கம் என்ன
விருந்து கேட்பதென்ன அதையும் விரைந்து கேட்பதென்ன

(முத்துக்களோ)

ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம் பின்னிப் பார்ப்பதென்ன
அருகில் நடந்து மடியில் விழுந்து ஆடக் கேட்பதென்ன
மலர்ந்த காதல் என்ன உன் கைகள் மாலை ஆவதென்ன
வாழைத் தோரண மேளத்தோடு பூஜை செய்வதென்ன

(முத்துக்களே)

No comments:

Post a Comment