Saturday, March 28, 2009

என்னதான் சுகமோ நெஞ்சிலே

பாடல்: என்னதான் சுகமோ நெஞ்சிலே
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி
வரிகள்:

என்னதான் சுகமோ நெஞ்சிலே
இதுதான் வளரும் அன்பிலே
ராகங்கள் நீ பாடிவா இன்னாளில்
மோகங்கள் நீ காணவா என்னாளும்
காதல் உறவே

(என்னதான்)

பூவோடு வண்டு புது மோகம் கொண்டு
சொல்கின்ற வண்ணங்கள் நீ சொல்லத்தான்
நான் சொல்லும் நேரம் இரு கண்ணீன் ஓரம்
எழுதாத எண்ணங்கள் நீ சொல்லத்தான்
இன்பம் வாழும் எந்தன் நெஞ்சம்
தீபம் ஏற்றும் காதல் ராணி
சிந்தாத முத்துக்களை நான் சேர்க்கும் நேரம் இது
காதல் உறவே

(என்னதான்)

தீராத மோகம் நான் கொண்ட நேரம்
தேனாறு நீ வந்து சீராட்டத்தான்
காணாத வாழ்வு நான் கண்ட நேரம்
பூமாலை நீ சூடிப் பாராட்டத்தான்
நீயென் ராணி நாந்தான் தேனி
நீயென் ராஜா நானுன் ரோஜா
தெய்வீக பந்தத்திலே உண்டான சொந்தம் இது
காதல் உறவே

No comments:

Post a Comment